உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Tuesday, March 29, 2011

திருமதி செல்வம்.... திருட்டு விசிடி கிடைக்குமா?

தினம் ராத்திரி எட்டு மணி ஆச்சின்னா... எல்லா வீட்டிலேயும் போய் பாருங்க.... எழவு விழுந்த வீட்ல அழற மாதிரி அழுதிட்டு இருப்பாங்க நம்ம ஆளுங்க..
 
என்னா கதை..இது... நீயா நானான்னு சும்மா... எபிசொடுக்கு எபிசொடுக்கு...பார்க்கிற..மக்களை..அப்படியே..பிழிஞ்சி எடுத்திடுராங்கப்பா..
 
ஒரு நல்ல கதைய...தைரியமா...காமெடியா..கொடுக்க தெரியாத..இவங்கெல்லாம்.. எதுக்கு சீரியல் எடுக்கணும்?
 
வேவு பார்க்கிறது, போட்டு கொடுக்கிறது, மருமகனை அடிச்சி தொலைக்கிறது, மருமகளை..வீட்டை வீட்டு ஓட்டுவது,பொண்ணுகளை..மயக்குகிறது, புருசனை மிரட்டுவது, தூங்கும்பொழுது கைநாட்டு பத்திரத்தில ஒட்டறது.....ச்சே....என்னாத்தை சிந்திக்கிறாங்க... இந்த இயக்குனர்கள்...
 
 
THIRUMATHI SELVAM, DEVADASI, SETHU FAME ACTRESS ABITHA PHOTO
நான் ஒன்று கேட்கிறேன்..இந்த சீரியலை...எடுக்கிற தயாரிப்பாளரே..இல்ல டைரக்டரோ.. இல்ல இதில..நடிக்கிறவங்களோ..தினம் பார்க்கிறாங்களா?
 
அப்படி அவர்கள் பார்த்து இருந்தா..இது மாதிரியெல்லாம்..சிந்திக்க முடியுமா?
 
சில நேரங்களில்...இந்த மாதிரி சீரியல பார்க்கும்பொழுது...வர கோவத்தில..எதிர்ல....இருக்கிறவங்க கிட்ட தான் காண்பிக்க முடிகிறது...
 
அந்த ராஜசேகர்..கேரக்டரும்...அந்த ஆளு சிரிக்கிறதும்.. சே...எரிச்சலா வருது..
 
 
 
 
இதோ..இவரோட..கதாபாத்திரம்
 
1. மகா..அமைதி
2. மகா..முரடன்
 
ஒன்னு இந்த மாதிரி...இல்ல..அந்த மாதிரி..
 
இப்ப ஜெயில்ல...அழுவற..மாதிரி..கேரக்டர்...
 
அப்பா புண்ணியன்வான்களே... சீக்கிரம் கதைய முடிச்சிடுங்க....இல்ல...எவனா ஒருவன்..உங்க சீரியல..அப்படியே..திருட்டி சிடியா..போட்டு வித்திடுவான்.
 
 

--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
 Focus to Solutions...Not to Problems..

No comments: