உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Sunday, March 27, 2011

மாதா பிதா குரு தெய்வம்

Click to show "Abdul Kalam" result 1

ஒரு பள்ளியின் தலைமையாசிரியரே...மாணவர்கள்...லீவு போட்டு கோவிலுக்கு போய்விட்டனர் என்பதற்காக எண்ணெயில் ஊறவைத்த பிரம்பால் அடித்தாராம்... இது இன்றைய நிலை....
 
ஆனால்....அன்றே.... ஒரு நல்ல ஆசிரியரால்...ஒரு இந்திய தேசத்தின் குடியரசு தலைவராக இவர் வருவார் என அடையாளம் காண்பிக்கப்படலாயிற்று....
அதற்கும் முன்னர்.... ஒரு ஆசிரியரே...இந்திய தேசத்தின் குடியரசு தலைவராக... வந்தவர்..அவரின் பிறந்த நாளை..ஆசிரியர்..தினமா..கொண்டாடப்படுகின்றது...
 
இப்படி ஆசிரியர்களையும் தலைமையாசிரியர்களையும்... மாதா பிதாவிற்கு அடுத்த தெய்வமாக..பார்க்கப்படும் நமக்கு...
 
இப்படி படிக்க வந்த மாணவர்களை..பிரம்பால்..அடிப்பது...மாணவர்களுக்கு மட்டுமல்ல...இந்த செய்தி கேள்விபட்ட அத்தனை..அன்பர்களுக்குமே...வேதனைபட நேர்ந்திருக்கும்..
 
மாணவர்களை...இப்படி அடித்து தான்... வாழ்க்கையில் முன்னேற வைக்க வேண்டும் என்றால்...அவர்களை..ஏன்..பள்ளிக்கூடம் அனுப்பவேண்டும்?... ஏதாவது அடியாட்களிடம் அனுப்பி நன்றாக மாணவர்களை...அடிக்கச்சொல்லலாமே...
 
ஆசிரியர்களே...மாணவர்களை..ஒருபோதும் அடிக்காதீர்கள்...  அன்பாக..சொல்லுங்கள்... அன்பிற்கு தான் அதிக சக்தி..
 
வாங்கும் அடிகள்..அந்த தருணங்களில்...வலிக்கும்...அதன் சுவடுகள்...இருந்துக்கொண்டேயிருக்கும்..
 
அன்பால்..சொல்லுகையில்.. வலியில்லாமல்.. மணவர்கள்..உணர்கையில்..அதன் ஆக்கச்சக்தி அதிகளவில்..இருக்கும்..
--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
 Focus to Solutions...Not to Problems..

No comments: