உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Friday, March 04, 2011

உறவுகள்...

அம்மா ஐந்து வயது சிறுவனுக்கு படத்தை காட்டி சொல்லும் விதம்

பிள்ளை: அம்மா இந்த போட்டோவுல யாரு?

அம்மா: இதுவா உன்னோட பாட்டி என்னோட அம்மா தான் டா.. கூட இருக்கிற 5 பாட்டிகள் எல்லாம் உன்னோட பாட்டி கூட பிறந்தவர்கள்

பிள்ளை: அம்மா இந்த போட்டோவுல யாரு?

அம்மா: இதுவா... என்னோட போட்டோ தான் டா கூட இருக்கிற 3 பேரும்   என்னோட கூட பிறந்த  உன்னோட சித்திகள்

பிள்ளை : அம்மா இந்த போட்டோவுல யாரு?

அம்மா: இதா உன்னோட அப்பா, நான், நீ இருக்கிற போட்டோ தான் டா...

பிள்ளை: அம்மா... இதுக்கு முன்னாடி பார்த்த எல்லா போட்டோவிலும்..  5 பாட்டிகள், 3 சித்திகள்ன்னு இருந்தாங்க... ஆனால்..என் கூட..அப்படி யாரும் இல்லையே ஏம்மா?

அம்மா:  (விடை சொல்ல தெரியாமல்..விழிக்கின்றாள்... உறவுகள் எங்கே?)

No comments: