உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Friday, August 03, 2007

பூவே உனக்கேன் கோபம்
என்னவள் மீது
உன்னைவிட வாசம்
கொண்டவள் என்றா?

தென்றலே உனக்கேன் கோபம்
என்னவள் மீது
உன்னைவிட சுகமாகத்
தொடுவாள் என்றா?

தூறல் சாரலே உனக்கேன் கோபம்
என்னவள் மீது
உன்னைவிட அதிக
மகிழ்வைக் கொடுப்பாள் என்றா?

தித்திக்கும் தேனே உனக்கேன் கோபம்
என்னவள் மீது
உன்னைவிட அதிக
தித்திப்பைக் கொடுப்பால் என்றா?

ஏனென்றே தெரியவில்லை
உங்களுக்கெல்லாம்
அவளின் மீது கோபம்?

உங்களையெல்லாம் அவளினுள்ளே
வைத்திருப்பதாலோ?

அன்புடன் இளங்கோ

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் இளங்கோ

அருமை அருமை கவிதை அருமை

பூ, தென்றல், தூறல், சாரல். தேன் அனைத்தௌம் அவளிடம் இருப்பதால் அவள் மீது அனைத்திற்கும் கோபமாம் - கற்பனை வளம் சிறப்பு

நல்வாழ்த்துகள் இளங்கோ
நட்புடன் சீனா