உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Friday, August 03, 2007

இறப்பு...

இவ்வுலகில்
யாரும் நிரந்தரமில்லை!

இறைவன் படைக்கின்றான்
ஆட்டங்களை ஆடவிட்டு
சிரிக்க வைக்கின்றான்
சிந்திக்க வைக்கின்றான்
சிலிர்க்க வைக்கின்றான்

சிதைக்கு தீ வைக்க
கற்றுக் கொடுக்கும் இறைவன்
நம்மையும் சிதையாக்கும்
வித்தை வைத்திருக்கின்றான்!

பிடித்தவர்களை வரவைத்து
கொல்கிறான்!
பிடிக்காதவர்களை வாழவைத்து
கொல்கிறான்! இறைவன்!

ஆட்ட நாயகனே வரம் கொடு
சாகா வரம் கொடு!

சக்தி கொடு எல்லோரும் வாழ
சக்தி கொடு!

அழுகையில் இளங்கோ

1 comment:

cheena (சீனா) said...

பிறப்பென்று இருக்கும் போது இறப்பும் உண்டு இளங்கோ - தாங்கிக் கொள்ள வேண்டும் - வரவைத்தும் வாழவைத்தும் கொல்கிற அன்பு அவனிடம் தான் உண்டு -

சோகம் தவிர்க்க வாழ்த்துகள்
நட்புடன் சீனா