உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Tuesday, January 18, 2011

கவிதை

உன் ஒற்றை
விழியில்
 ஆயிரம்
கவிதைகள்
தெரியுதே!

பாலாஜி


பாண்டியிலிருந்து பாய்ந்த அம்பு தான் இந்த பாலாஜி
அரும்பு மீசையில் அழகாய் தமிழ் பேசும் மனிதர்
பேச்சிலே இனிமையும் பழகுவதில் பணிவையும் கொண்டவர்.
இயக்குனர் திரு.கே.எஸ். ரவிகுமார் பாடசாலையில் பயின்ற மாணவர்.
வெள்ளித்திரையே வரவேற்க ஆவலாய் இருக்கின்றது...
முன்னால் குடியரசுத் தலைவர்.. உயர்திரு. எ.பி.ஜெ. அப்துல் கலாமிடம் வாழ்த்துக்கள் பெற்ற மனிதரை என் நண்பனாக நான் அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி.


வாராயோ தோழா வாராயோ தோழா..

கே.எஸ்.ரவிகுமார்

1990ல் இருந்து திரைப்படத் துறையில் கலக்கிக்கொண்டிருக்கும் மிகச் சிறந்த இயக்குனர்.  திரு.சரத்குமாருடன் வைத்து இவரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது...


நல்ல கதையினையும், சிறந்த காட்சிகளை அமைத்தும் பார்க்கும் மக்களை மகிழ்விப்பதில் இவர் திறமையானவர் என்பது உலகமறிந்தது தான்...


ஆனால் இவரிடம் ஒரே ஒரு குறை உண்டு 20 வருடங்களாக... என்ன குறை?


இவர் எந்த ஒரு நடிகர்/நடிகையையும் அறிமுகம் செய்யவில்லை தன்னுடைய திரைப்படங்களில்...


ஏற்கனவே கலக்கிக்கொண்டிருக்கும் நடிகரையோ அல்லது நடிகையையோ தான் சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்க வைப்பார்.


இந்த 20 வருடங்களில் 38 திரைப்படங்களை கொடுத்து அனைத்தையும் வெற்றியடைய உழைத்துள்ளார்...


இத்தனை படங்களில்.. குறைந்தது ஒரு நடிகரை அல்லது நடிகையை அறிமுகப் படுத்தி இருந்தால் நமக்கு  புதிய நட்சத்திரங்களாக சிலர்  கிடைத்திருக்கலாம்  என நான் சொல்கிறேன்.


1991ல் எம்.ஐ.டியில் பி.டெக் படித்த காலத்தில், குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் சேரன் பாண்டியன் படம் பார்த்துவிட்டு பரிட்சை எழுதி பாஸ் பண்ணிய நாட்களும் உண்டு.


அதே சமயத்தில் இவர் மிகச் சிறந்த இயக்குனர்களை திரைப்படத் துறைக்கும் கொடுத்துள்ளார்.... இது பாராட்டப்படவேண்டியது தான்.


பார்ப்போம் இனி வரும் காலங்களில்.. ஏதாவது புது நட்சத்திரம் தோன்ற வைப்பாரா என்று?


இவரின் சிஷ்யன் பாலாஜி என்னுடைய நெருக்கமான நண்பர்களில் ஒருவர். எம்.பி.ஏ படித்த காலத்தில் பாலாஜியும் நானும் நட்புக்காக நண்பர்களானோம்...


திரு. பாலாஜி மிகச் சிறந்த திரைப்படத்தினை கொடுத்து பார்க்கும் மக்களை பரவசம் அடைய வைக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றேன்..

Monday, January 10, 2011

தமிழ் திரைப்பட உலக பிரம்மாக்கள்

தமிழ் திரைப்பட உலகின் பிரம்மாக்களை சற்று அலச ஆரம்பித்தேன்.. அற்புதமான தகவல்கள் கிடைத்தது...

உபயம் : இணைய தளம்

எஸ்.எஸ்.வாசன் : சந்திரலேகா (1948)
என்.எஸ்.கிருஸ்ணன் : மணமகள் (1951)
பீம்சிங் : அம்மையப்பன் (1954)
பி.ஆர்.பந்துலு : தங்கமலை ரகசியம் (1957)
ஸ்ரீதர் : கல்யாண பரிசு (1959)
ஏ.பி.நாகராஜ் : வடிவுக்கு வளைகாப்பு (1962)

பாலச்சந்தர் : நாணல் (1965)


1970 - 1980 கால கட்டத்தில் வந்த பிரம்மாக்கள்.. எண்ணிக்கையில் எட்டு சிறப்பான திரைக்கதை அமைப்பாளர்

பாரதிராஜா : பதினாறு வயதினிலே (1977)
எஸ்.பி.முத்துராமன்: புவனா ஒரு கேள்விக்குறி (1978)
மகேந்திரன் : முள்ளும் மலரும் (1978)
ருத்ரையா : அவள் அப்படித்தான் (1978)
பாலு மகேந்திரா : அழியாத கோலங்கள் (1979)
பாக்யராஜ் : சுவர் இல்லாத சித்திரங்கள் (1979)
ஆர்.சுந்தரராஜன் : கிளிஞ்சல்கள் (தகவல் தெரியவில்லை)
டி.ராஜேந்தர் : ஒரு தலை ராகம் (1980)


1981 -1990 காலகட்டத்தில் வந்த பிரம்மாக்கள் எண்ணிக்கை அப்படியே இரண்டு மடங்காக.............

எஸ்.ஏ.சந்திரசேகர்: சட்டம் ஒரு இருட்டரை (1981)
மனோபாலா : ஆகாய கங்கை (1982)
மணி ரத்னம் : பகல் நிலவு (1985)
பாண்டிய ராஜன் : ஆண் பாவம் (1985)
மவுலி : ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது (1985)
யூகி சேது : கவிதை பாட நேரமில்லை (1987)
சுரேஷ் கிருஷ்ணா : சத்யா (1988)
பார்த்திபன் : புதிய பாதை (1989)
விக்ரமன் : புது வசந்தம் (1989)
கே.எஸ்.ரவிகுமார் : புரியாத புதிர் (1990)
ஆர்.கே.செல்வமணி : புலன் விசாரணை (1990)
ஆர்.வி.உதயகுமார் : கிழக்கு வாசல் (1990)
வசந்த் : கேளடி கண்மணி (1990)


1991 - 2000 காலகட்டத்தில் வந்த பிரம்மாக்கள் எண்ணிக்கையில் ஏற்கனவே இருந்தவர்களுடன் 16 இயக்குனர்களை அதிகரிக்க வைத்தன...

அகத்தியன்: மங்கலம் தந்துனானே (1991)கதிர் : இதயம் (1991)
செல்வா : தலைவாசல் (1992)
பி.ஸி.ஸ்ரீராம் : மீரா (1992)
எஸ். சங்கர் : ஜென்டில் மேன் (1993)
நாசர் : அவதாரம் (1995)
ஏ.வெங்கடேஷ் : மஹா பிரபு (1996)
சேரன் : பாரதி கண்ணம்மா (1997)
சீமான் : பாஞ்சாலங்குறிச்சி (1997)
ரமேஷ் கண்ணா : தொடரும் (1998)
சரண் : காதல் மன்னன் (1998)
சசி : சொல்லாமலே (1998)
தரணி : எதிரும் புதிரும் (1999)
பாலா : சேது (1999)
எஸ்.ஜே.சூர்யா : வாலி (1999)
சந்தான பாரதி : வியட்நாம் காலணி(தகவல் தெரியவில்லை)



2001 - 2010 காலகட்டத்தில் வந்த பிரம்மாக்கள் எண்ணிக்கையில் 50 ஐ தாண்டிவிட்டது...

கவுதம் மேனன் : மின்னலே (2001)
காந்தி கிருஸ்ணா : நிலா காலம் (2001)
லிங்குசாமி : ஆனந்தம் (2001)
ஜீவா : 12பி (2001)
முருகதாஸ் : தீனா (2001)
பிரபு சாலமன் : கண்ணோடு கண்பெதல்லாம் (2001)
அழகம் பெருமாள் : டும் டும் டும் (2001)
அமீர் : மவுனம் பேசியதே (2002)
சுசி கணேசன் : விரும்புகிறேன் (2002)
ஹரி : தமிழ் (2002)
தங்கர் பச்சன் : அழகி (2002)
பாலாஜி சக்திவேல் : சாமுராய் (2002)
கரு.பழனியப்பன் : பார்த்திபன் கனவு (2003)
எம்.ராஜா : ஜெயம் (2003)
விஷ்ணுவரதன் : குரும்பு (2003)
வசந்த பாலன் : ஆல்பம் (2003)
விகரம் குமார் : அலை (2003)
ஜோதி கிருஸ்ணா : எனக்கு 20 உனக்கு 18 (2003)
சமுத்ரகனி : உன்னை சரனடைந்தேன் (2003)
செல்வராகவன் : காதல் கொண்டேன் (2003)
பூபதி பாண்டியன் : தேவதையை கண்டேன் (2004)
ராதா மோகன் : அழகிய தீயே (2004)
ஆர்.மாதேஷ் : மதுர (2004)
தியாகராஜன் : ஷாக் (2004)
பேரரசு : திருப்பாச்சி (2005)
பிரியா : கண்ட நாள் முதல் (2005)
திருமுருகன் : எம் மகன் (2006)
எஸ்.பி.ஜெகன்னாதன் : இயற்கை (2006)
சிம்பு தேவன் : இம்சை அரசன் 23ம் புலிகேசி (2006)
என்.கிருஷ்ணா : சில்லுனு ஒரு காதல் (2006)
மிஷ்கின் : சித்திரம் பேசுதடி (2006)
தருன் கோபி : திமிரு ( 2006)
சாமி : உயிர் (2006)
சுராஜ் : தலைநகரம் (2006)
வெங்கட் பிரபு : சென்னை 600028 (2007)
வெற்றி மாறன் : பொல்லாதவன் (2007)
ஏ.எல்.விஜய் : கிரீடம் (2007)
சீனு ராமசாமி : கூடல் நகர் (2007)
புஸ்கர் காயத்ரி : ஓரம்போ (2007)
ராகவ லாரன்ஸ் : முனி (2007)
ராஜு சுந்தரம் : ஏகன் (2008)
மித்ரன் ஜவஹர் : யாரடி நீ மோகினி (2008)
ஆர்.கண்ணன் : ஜெயம்கொண்டான் (2008)
மதுமிதா : வல்லமை தாராயோ (2008)
ராம் : கற்றது தமிழ் (2008)
எம். சசிகுமார் : சுப்ரமணியபுரம் (2008)
ராஜேஷ் : சிவா மனசுல சக்தி (2009)
பாபுசிவன் : வேட்டைக்காரன் (2009)
பண்டிராஜ் : பசங்க (2009)
சுசிந்திரன் : வென்னிலா கபடி குழு (2009)


இன்னும் சிலர் பிரதாப் போத்தன், ராமராஜன்,செய்யார் ரவி, என நிறைய இயக்குனர் இப்பட்டியலில் இருக்கின்றனர்...



இன்றைய தேதியில் 100 சினிமா இயக்குனர்களை சென்னை வைத்துக்கொண்டிருந்தும்... எத்தனை திரைப்படங்களை நம்மால் இயல்பாக பார்க்க முடிகின்றது?


என்னுடைய பள்ளி நாட்களிலும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி..
கி.பி. 1990 வரையில் ஒரே ஒரு பத்து ரூபாயில் குடும்பம் முழுவதும் (பெற்றோர் மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆக மொத்தம் 4 பேர்) பார்க்க முடிந்தது...


கி.பி. 2000 வரையில் ஒரு நூறூ ரூபாயில் அதே குடும்பம் தரமான திரைப்படத்தினை பார்த்து இரசித்தன....

கடந்த சில வருடங்களாக அதே குடும்பம் ( 4 பேர் மட்டும்) ஒரு தரமான திரைப்படம் பார்க்க குறைந்தது 500 ரூபாய் செலவிடப்படுகின்றது!!!!!!!!!!!!!!!!!!!!


யாரால் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தி வைக்க முடியும்?

திரு.இராமசெயம், காட்பாடி


வேலூர் மாவட்டம், திம்மம்பேட்டை கிராமத்தில் அவதரித்த முன்னால் ஆசிரியர் இவர். தன் இளம் வயதில் அம்மாவை இழந்தவர்..அப்பா, சிற்றப்பா, அண்ணா, தம்பிகள், தங்கைகளுடன் வாழ்ந்தவர்..வாழ்ந்துக்கொண்டிருப்பவர்...

தம் இளம் வயதில் அதிகமான போராட்டங்களின் இடையே படித்து வாழ்க்கையில் தனக்கென்று ஓர் பாதையை அமைத்துக்கொண்டவர்...

வேலூர் மாவட்டத்தில் அம்பலூர், மிட்டூர், திருப்பத்தூர்,வஞ்சூர் அரசினர் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்...

சிறப்பாசிரியர் பட்டம் வாங்காமலே மாணவர்களுக்காக சிறப்பாக பணியாற்றியர்..இவரிடம் படித்த மாணவர்கள் இன்று உலகமெங்கும் இருக்கின்றனர்...மரியாதையுடன் சில வார்த்தைகள் உரையாடிவிட்டு செல்லும் முன்னால் மாணவர்களைக் கண்டு வியந்திருக்கின்றேன்..

திருமதி. சாந்தகுமாரியை மணந்துக்கொண்டு குடும்பத்திற்காக உழைத்தவர், தங்களுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளை சிறப்பான குணங்களுடன் வளர்த்தவர்கள் தான் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளனர்.

முதல் குழந்தையாக பெண்ணையும், இரண்டாவதாக ஆண் குழந்தையையும் பெற்றனர்.. அதற்குப் பிறகு ஏற்பட்ட பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று பறிகொடுத்துவிட்டனர்.

இவர்களின் மகன் தான் இந்த இனியவன் இளங்கோவன்.

முரண்பாடுகள்

முரண்பாடுகள்

அழுதுக் கொண்டே
பிறக்கும் உயிரை
சிரித்துக் கொண்டு
பார்க்கின்ற நாம்.......

சிரித்துக் கொண்டே
இறக்கும் உயிரை
அழுதுக் கொண்டு
பார்க்கின்றோம் நாம்........

ஏன் இந்த முரண்பாடு இவ்வுலகில்

Saturday, January 08, 2011

இயக்குனர் பாரதிராஜா

என்னை
இவர் பார்க்கவில்லை.....
வெள்ளித்திரையில்
என் முகம்
பார்க்க முடியாமல் மக்கள்!!!!!!!!!!

உண்மை

சிவப்பான சினம் காட்டிடும்
பெண்ணை விட
கருப்பாய் கனிவு காட்டிடும்
பெண்ணை பிடிக்கும்
உண்மை தான்!!!!!!!!!!!!!!!

பச்சையான இயற்கை

வரும் காலத்தில்... புகைப்படத்தில் மட்டும் பார்த்து இரசிக்க முடியும் என்று மனம் கலங்கி சொல்ல வைக்கின்றது இந்த படம்

Friday, January 07, 2011

சிவாஜி ராவ் - ரஜினிகாந்த்



இந்திய திரைப்பட உலகில் கொடிகட்டி பறக்கும் மனிதர்... தனது ஸ்டைலான ஆக்கத்தின் மூலம்..ரசிகர்களை.. ஈர்த்த மனிதர்...

முயற்சி திருவினையாக்கும் என்பதை உலகிற்கு தெரிய வைத்தவர்... ஆன்மீகம், அமைதி, இவரிடத்தில் இருப்பதால்..

இரசிகர்களின் இதயத்திலும் இருக்கின்றார்..

பார்த்து பேச விரும்பும் மனிதர்களில் இவரும் ஒருவர்.

ஆண்பாவம்

ஆண்பாவம் திரைப்படம் வெளியான காலத்தில், படத்தினை பார்த்து இயக்குனர் திரு.பாண்டியராஜன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன்... அடுத்த வாரத்தில்..அவரிடமிருந்து ஒரு பதில் கடிதம் வந்தது அதில் அவருடைய அழகான புகைப்படமும் இருந்தது... 1985ல் அது ஒரு பொக்கிஷம் எனக்கு.

படைப்பாளிகள்

தமிழகத்தின் முதல்வர் அருகில் அமரும் வாய்ப்பும், மரியாதையும் யாருக்கு அமைகின்றன?
சினிமா படைப்பாளிகளுக்கு மட்டும் தானா?

மதிப்பிற்குரிய சினிமா இயக்குனர் திரு. பாக்கியராஜ்.. கலைஞரின் அருகில்..

Thursday, January 06, 2011

இயற்கை