உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Sunday, March 13, 2022

கவிதை

 வாசித்தவர்

வாழ்த்தும்போது தான்                           எழுதியவருக்கே

பெருமை வந்து சேரும்.


பார்த்தவர்

பாராட்டும்போது தான்

படைத்தவருக்கே

புகழ் வந்து சேரும்.


கேட்டவர்

வாழ்ந்து காட்டும்போது

தான் பேச்சாளருக்கே

பேர் வந்து சேரும்.


கற்றவர்

கசடற திகழும்போது

தான் கற்பித்தவருக்கே

மகிழ்ச்சி வந்து சேரும்.


இளங்கோவன்

சென்னை 13-3-22, 17:28 hrs.

அப்பாவின் ஆத்மா - சிறுகதை


சினிமா தயாரிப்பாளர் : யோவ் டைரக்டர், அந்த ஹீரோ வேசத்துக்கு, அந்த ஆளை ஏன்யா போடற? வேணும்னா உன்னோட திருப்திக்கு, அந்த ஹீரோ சாயல்ல உள்ள புது பையனை தேடிப் பிடிச்சி போடுயா. அந்த ஹீரோவுக்கு கொடுக்குற சம்பளத்தில் நாம நாலு படமே எடுத்துடலாம்.


டைரக்டர் : அப்படினா என் மகனையே ஹீரோவா போட்டுடலாமா சார்? ஒரு ரூபாய் கூட சம்பளமே வேணாம்.


முடிவு 1 : படம் சக்கை போடு போட்டது, டைரக்டர், தன் மகனோட படம் என்பதால் பார்த்து பார்த்து செய்து மெனக்கெட்டார். ஒரே நாளில் வசூலான தொகையில், மகிழ்ச்சியான தயாரிப்பாளர், அடுத்த படத்திற்கும் உன் மகனையே ஹீரோவா போடு என்றார்.


டிவிஸ்ட் 1 : சார்... ரொம்ப சந்தோசம், அப்படியே இன்னொரு விசயம், என் ரெண்டாவது பையன் எப்பப் பார்த்தாலும் மியூசிக், பாட்டு, ஆல்பம் னு வெறியா இருக்கான், ஒரு தடவை அவனோட மியூசிக் கேளுங்க.


முடிவு 2 : மியூசிக் ஆல்பம், செமையா இருந்தது, தயாரிப்பாளர் ரொம்ப குஷியாகி, இந்த படத்தில் இசையமைப்பாளரா போட்டுவிட்டார்.  சம்பளம் குறைவு என்பதால், தயாரிப்பாளருக்கு குஷி.


டிவிஸ்ட் 2: வீட்டுக்கு வந்த டைரக்டர், ஒரு மகனை ஹீரோ ஆக்கிட்டோம், இரண்டாவது மகனை இசையமைப்பாளரா ஆக்கிட்டோம், ஆனால், மூனாவது மகன், பொறுப்பு இல்லாமல் ....."வந்தால் டைரக்டராகத் தான் வருவேன்னு" சுத்திட்டு இருக்கானேன்னு, ஆதங்கத்தில் இரவெல்லாம் யோசித்து, தூக்கம் வராமல் புரண்டு படுத்தவர், அப்படியே ஹார்ட் அட்டாக்ல உயிரை விட்டார்.


முடிவு 3 : எப்படியாச்சி, என்னாச்சி, எதனால னு கேட்டு வந்தவங்க எல்லாம் துக்கம் விசாரிச்சப்ப, ஒரே ஒரு மனிதரின் உள்ளமோ..இனி எப்படி என் படத்தை முடிப்பேன், இந்த டைரக்டர் கூடவே இருப்பதால், மற்ற டைரக்டரை கூட அலட்சியப்படுத்தினேனே என உள்ளே புலம்பி வெளியே கண்ணீர் விட்டார்.


டிவிஸ்ட் 3 : அப்பாவின் காரியம் முடிந்ததும், தயாரிப்பாளரிடம் வந்த இயக்குனரின் மூன்று பிள்ளைகளும், தயாரிப்பாளரிடம், சார் எங்க அப்பாவின் கடமையை நாங்க நிறைவேற்றுவோம் னு சொன்னார்கள். சரிப்பா சந்தோசம், ஆனால் டைரக்டருக்கு எங்கே போவேன்? சார் அந்த கவலையே வேண்டாம், இதோ இவன் தான் கடைசி தம்பி, பத்து குறும்படம் பண்ணியிருக்கான், அப்பா எழுதி வைத்துள்ள கதையை கூட படித்துள்ளான். நீங்க கவலையை விடுங்க.


முடிவு 4 : படம் எடுக்கிற விதத்தில் அப்பனையே மிஞ்சிவிட்டான் மகன், தயாரிப்பாளருக்கு ரொம்ப சந்தோசம். டைரக்டரோட பசங்க உயிரை கொடுத்து படத்தை எடுக்கறாங்களே, அவங்க சொந்தப் படம் போல என மகிழ்ந்தார்.


டிவிஸ்ட் 4 : டாக்டர் என்ன சொல்றீங்க? ஆமாம் டைரக்டர் சார், உங்க உடம்பு  கெட்டுப்போச்சி, குடிச்சி, குடிச்சியே நுரையீரலும் போயிடுச்சி. உங்க 3 பிள்ளைகளுக்கும் ஏதாவது செய்துடுங்க, அப்ப தான் இத்தனை வருசமா சினிமா பீல்ட்ல நீங்க இருந்ததன் அடையாளம். மிஞ்சி போனால் ஒரு வருசம் கூட உங்க உடம்பு தாங்காது, இதை நான் ஏன் உங்க கிட்டே சொல்றேன்னா எதார்த்தத்தை நீங்களே புரிஞ்சிக்கனும். அந்த பசங்களை கூப்பிட்டு சொன்னால் நொடிஞ்சிடுவாங்க. அதான் சொல்கிறேன். ரொம்ப நன்றி டாக்டர். இறப்பதற்கு முன் சரியாக மூன்றாவது மாதத்தில் இருந்து ஒவ்வொரு செயலையும் பிளான் பண்ணி, தயாரிப்பாளர் தயவில் நிறைவேற்றியும் விட்டார், உயிர் விடும் முன் மொத்த கதையையும் மூன்றாவது மகனிடம் திணித்தும் விட்டார்.


+++++ முற்றும்+++++


எழுத்தாளர் இளங்கோவன்

சென்னை, 09-03-2022, 09:13 am.

செக்யூரிட்டி - சிறுகதை


சதீஸ், வினோத், மனோ

மூன்று பேரும் ஆளுக்கொரு கிளாஸ்ல சரக்கை ஊற்றி, சியர்ஸ் செய்து மடக் மடக்கென உள்ளே தள்ளினர்.


 "டேய் சதீஸ் உங்க அப்பாவை, HDFC bank ATM ல நான் பார்ந்தேன்டா" என்ற வினோத்திடம் "அவர் ஏதாவது பணம் எடுக்க போயிருப்பார் டா" பதிலளித்தான் சதீஸ். 


"செக்யூரிட்டி யூனிபார்ம் ல போய், அதே ATM ல பணம் எடுப்பாராடா?" வினோத் கிண்டலாக சொல்லியதும், ஓங்கியெறிந்தான் கிளாசை, எடுத்தான் வண்டியை வீட்டிற்கு. 


இரவு 12 மணிக்கு தட்டுத்தடுமாறி வீட்டிற்கு வந்த அப்பாவை பார்த்து ஓவென அழுத பிஈ பட்டதாரியான சதீஸ், வொயிட் காலர் ஜாப் தேடி காலத்தை வீண்டித்த சதீஸ், அன்று முதல் கம்பெனிகளின் படிகளை ஏற துவங்கினான். 


படிப்புக்கு கிடைத்த வேலையில் சேர்ந்து, அப்பாவை வீட்டிலே ஓய்வெடுக்க வைத்தான்.  


ஒரே ஒரு நாள் செக்யூரிட்டி டிரஸ் போட்டு, வினோத் எதிரிலே காட்டி, தன் மகனை திருத்திய மகிழ்வில் திளைத்தார் அப்பாவும். 


காலாகாலத்தில் அவனுக்கு கால்கட்டும் போடனும் லைப்லேயும் செக்யூரிட்டி வந்துடும் என்ற முடிவுக்கு வந்தார் சதீஸின் அப்பா.


+++ முற்றும்++++


எழுத்தாளர் இளங்கோவன்

சென்னை, 09-03-2022, 10:50 am.