உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Thursday, April 07, 2011

டி.கே.சந்திரசேகர் - மனித வளம் ஆலோசகர்


வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளியில் எனக்கு ஆங்கில ஆசிரியராக இரண்டு வருடங்கள் 1984 முதல் 1986 வரை பாடம் எடுத்தவர்.

வகுப்பினுள் நுழையும்பொழுதே.. அனைவரையும் சிரிப்புடன் பார்க்க வைக்கும் சக்தி படைத்தவர்.. பாடம் நடத்தும் விதமும்... மனதில் பதிய வைக்கும் விதமும்.. எல்லா மாணவர்களையும் மகிழ வைத்தது உண்மை..

ஜேசிஸ் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்... இன்று கலைஞர் டிவியில்..மனிதவளம் குறித்து அற்புதமாக பேசி வருகின்றார்...

அன்று மாணவர்களை..பாடம் நடத்தி படிக்க வைத்தவர்..இன்று  கலைஞர் டிவியில்..பார்க்கும் மக்களையும் மனிதவளம் குறித்து பேசிமனதில் அழகாக பதிய வைக்கின்றார்..

ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும்..சிந்தனையின் வெளிப்பாடு... இன்று...மக்களை..அடைய வைக்கின்றாரே...இதுவே..ஒரு மிகப்பெரிய வெற்றி...

வாழ்த்துக்கள்... டி.கே.எஸ் சார்...

ரப்பர் பூ (ரா.இளங்கோவன்)
சென்னை

No comments: